வத்திராயிருப்பு, மே 23: விவசாயம் செழிக்க மழை வேண்டி வத்திராயிருப்பு முத்தலாம்மன் கோயில் ஜல்லிக்கட்டு வருகின்ற 26ம் தேதி காலை 8 மணிக்கு நடைபெற உள்ளது.
வத்திராயிருப்பு அருகே சேதுநாராயணபுரம், கான்சாபுரம், மகாராஜபுரம் உள்ளிட்ட ஊர்களுக்குள் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. வத்திராயிருப்பில் கடந்த 2 ஆண்டுகளாக ஊருக்குள் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. தற்போதுள்ள நிலையில் ஜல்லிக்கட்டு ஊருக்குள் நடைபெறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஊருக்கு வெளியே தாணிப்பாறை செல்லும் வழியில் வத்திராயிருப்பு அனைத்து சமுதாய ஊர் பொதுமக்கள் மற்றும் காளை வளர்ப்போர் சார்பில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.