ஐடி ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

ஆவடி, மே 23: ஆவடியில் ஐடி ஊழியரின் வீட்டை உடைத்து, 10 சவரன் நகை மற்றும் ₹30 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.ஆவடி, வசந்தம் நகர், யமுனா தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (32). ஐடி கம்பெனி ஊழியர். இவர், கடந்த 17ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, பெற்றோருடன் ஊட்டிக்கு கோடை சுற்றுலா சென்றுவிட்டு நேற்று காலை வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை பார்த்து ராமச்சந்திரன் அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு திறந்திருந்தது. அதில் வைத்திருந்த 10 சவரன் நகைகள், ₹30 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது  தெரியவந்தது. தகவலறிந்துஆவடி இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு  சென்று விசாரித்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு   வீட்டில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடுகின்றனர்.

Related Stories: