தூத்துக்குடியில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி

ராஜபாளையம், மே 23: அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு போராட்டம் நடத்தியபோது துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் இறந்தனர். இதற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சேத்தூர் மேட்டுப்பட்டி ஜீவா மன்றத்தில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சிக்கு அமைப்பின் மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி தலைமை வகித்தார்.

இ.கம்யூ., மாவட்ட செயலாளர் லிங்கம், ஏ.ஐ.ஒய்.எப். ஒன்றிய செயலாளர் வீராச்சாமி, மாநிலகுழு உறுப்பினர் ஜெயக்குமார், நகர செயலாளர் ராஜா, வழக்கறிஞர் பகத்சிங் உள்ளிட்ட

அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியும், சம்பவத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.

Related Stories: