சிவகாசி, மே 23: சிவகாசி அருகே சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும் என குடியிருப்புவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
சிவகாசி ஆனையூர் ஊராட்சி சுந்தரவிநாயகர் காலனியில் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இப்பகுதி முழுவதும் இத்தொட்டியிலிருந்துதான் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொட்டியின் தூண்கள் மற்றும் மேற்பகுதி சேதமடைந்துள்ளது.