வாகன விபத்தில் முதியவர் பலி

உத்திரமேரூர், மே 23: உத்திரமேரூர் அடுத்த மன்னன்குடிசையை சேர்ந்தவர் கணேசன் (75). நேற்று முன்தினம் இரவு கணேசன், டீ கடைக்கு சென்றார். அந்த நேரத்தில், அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், கணேசன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.தகவலறிந்து உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: