உத்திரமேரூர் பேரூராட்சியில் சமுதாய கூடம் அமைக்க வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை

உத்திரமேரூர், மே 23:உத்திரமேரூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் பட்டஞ்சேரி, நீரடி, மணித்தோட்டம், நல்லூர், ஓங்கூர், குப்பையநல்லூர், கல்லமாநகர், மல்லிகாபுரம், மல்லியங்கரணை, பருத்திக்கொள்ளை, ஆணைப்பள்ளம், காக்கநல்லூர், வேடபாளையம் உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இப்பகுதி கிராம மக்கள் தங்களது திருமணம், நிச்சயதார்த்தம், பிறந்தநாள் விழா, சீமந்தம் உள்பட பல்வேறு சுப நிகழ்ச்சிகளுக்கும் சுயஉதவி குழு கூட்டங்கள், கிராம சபை கூட்டம் போன்ற பொது நிகழ்ச்சிகளுக்கும் உத்திரமேரூரில் உள்ள தனியார் திருமண மண்டபங்களை நாட வேண்டியுள்ளது. உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் குறைந்த பட்ச வாடகையாக ₹25 ஆயிரம் முதல் ₹1 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது.

இதனால் ஏழை எளிய மக்கள் தங்களது வீட்டு சுப நிகழ்ச்சி மற்றும் பொது நிகழ்வுகளை தனியார் திருமண மண்டபங்களில் நடத்த அதிக செலவு ஏற்படுவதால், அவர்களின் ஆசை கனவாகவே உள்ளது. இதை போக்கும் வகையில் உத்திரமேரூர் பேரூராட்சியில் புதியதாக சமுதாய கூடம் அமைக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: