சென்னை: சென்னை, தி.நகர் சகத்துல்லா சாலை, கண்ணதாசன் சாலை உள்ளிட்ட 23 உட்சாலைகளில் ஓராண்டுக்கு முன்னர் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடங்கப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான சாலைகளில் நடைபாதைகள் பெரியளவில் விரிவாக்கம் செய்யப்பட்டு கற்கள் பொருத்துவது, கம்பிகள் வைப்பது என பல்வேறு வேலைகள் முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் முடிக்கப்பட்ட நடைபாதைகளில் சாப்பாடு கடைகள் நடத்தி வருகின்றனர். இதனால் பாதசாரிகள் நடைபாதையை உபயோகிக்க முடியாமல் கடும் சிரமமடைந்து வருகின்றனர். பாதசாரிகளுக்கு அமைக்கப்பட்ட நடைபாதையை உணவகங்கள் அபகரித்துள்ளனர். இது பாதசாரிகளுக்கு அமைக்கப்பட்டதா? இல்லை, உணவகங்களுக்கு அமைக்கப்பட்டதா? என பொதுமக்களிடையே கேள்வி எழுந்துள்ளது. இதுவரை எந்த அதிகாரிகளும் இதுகுறித்து நடவடிக்கைகள் எடுக்கவில்லை.