மின்கம்பத்தில் மினிவேன் மோதி விபத்து

திருவெண்ணெய்நல்லூர், மே 23: கடலூர் மாவட்டம் ஆபத்தாரணபுரம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் மகன் சதாசிவம்(42), மினிவேன் டிரைவர். ராஜேந்திரன் மகன் வேலுமணி(19) கிளீனர். இவர்கள் இருவரும் நேற்று மதியம் கடலூர் பகுதியிலிருந்து மினிவேனில் டயர்களை ஏற்றிகொண்டு திருவண்ணாமலை சென்றனர். திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சின்னசெவலை வழியாக செல்லும்போது அப்பகுதி பஸ் நிறுத்தம் அருகே திடீரென நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டிரைவர், கிளீனர் ஆகிய இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது பற்றி தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மினிவேனை

அப்புறப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: