ஆற்காடு, மே 23: ஆற்காடு அருகே பணத்தை திருப்பி கேட்ட பைனான்சியரை இரும்பு தடியால் தாக்கிவிட்டு கீழே விழுந்து விபத்தில் சிக்கியதாக நாடகமாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆற்காடு அடுத்த கலவை மேட்டு செங்குந்தர் தெருவைச் சேர்ந்தவர் காமராஜர்(41). பைனான்சியர். இவரிடம் கலவை அப்பாதுரை பேட்டை பகுதியை சேர்ந்த சுபேதார் மற்றும் கரீம் ஆகியோர் பைனான்சில் பணம் வாங்கி உள்ளனர். அந்த பணத்தை காமராஜர் திருப்பி கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இருவரும் கடந்த 17ம் தேதி இரவு காமராஜர் வீட்டுக்கு சென்று அவரை கல்லாலும், இரும்பு தடியாலும் சரமாரியாக தாக்கினார்களாம். இதில் தலையில் படுகாயமடைந்த அவரை அவர்களே கலவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.