பாவூர்சத்திரம், மே 22: பாவூர்சத்திரத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. மத்திய அரசின் திறன் வளர்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் எம்எஸ்பி வேலாயுத நாடார் லெட்சுமிதாயம்மாள் பாலிடெக்னிக் சமுதாய வளர்ச்சி திட்டமும் தமிழக அரசின் சுகாதாரத் துறையும் இணைந்து டெங்கு விழிப்புணர்வு முகாம் பாவூர்சத்திரத்தில் நடந்தது. முகாமிற்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார், வட்டார சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் வேலு ஆகியோர் டெங்கு குறித்து சிறப்புரையாற்றினர். சி.டி.டி.பி ஆலோசகர் கணபதி சுப்பிரமணியன் வரவேற்றார். இளநிலை ஆலோசகர் கார்த்திகேயன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமுதாய வளர்ச்சி திட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.