மணக்காடு ஜீவகுமார் இல்ல திருமணம் பாளையில் 24ம் தேதி நடக்கிறது

நெல்லை, மே 22: டிடிடிஏ நெல்லை திருமண்டல வேதநாயகம் அணியின் செயல் தலைவரும், டயோசீசன் டெப்போ கண்காணிப்பாளருமான மணக்காடு ஜீவக்குமார் மகள் பெனிட்டா கோயில் செல்வம், சாப்டர் பள்ளி ஆசிரியர் வினோத்ராஜ் திருமணம் வரும் 24ம் தேதி மாலை 4 மணிக்கு பாளை மிலிட்டரிலைன் கிறிஸ்து ஆலயத்தில் நடக்கிறது. பிஷப் ஜெபச்சந்திரன், நெல்லை திருமண்டல லே செயலர் வேதநாயகம், பொறுப்பு தலைவர் ஏஎச்எல் பில்லி, குருத்துவ செயலர் பீட்டர் தேவதாஸ், இயக்குனர் விஜிலா சத்தியானந்த் எம்பி, திருமண்டல பொருளாளர் தேவதாஸ் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். தொடர்ந்து மிலிட்டரி லைன் ஆலய வளாகத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் திருமண்டல நிர்வாகிகள், குருமார்கள், பள்ளி, கல்லூரி தாளாளர்கள், முதல்வர், தலைமை ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை மணக்காடு ஜீவகுமார் மற்றும் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

Related Stories: