போடி, மே 22: நாகலாபுரத்தில் குவிந்து கிடக்கின்ற குப்பைகளால் சுகாதாரக்கேடுகள் ஏற்படுவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். போடி அருகே போ.நாகலாபுரம் கிராம ஊராட்சி உள்ளது. இங்கு 7 ஆயிரத்திற்கும் மேல் மக்கள் குடியிருக்கின்றனர். பொதுமக்களிடம் சேகரமாகின்ற அனைத்து குப்பை கழிவுகளையும் தெருக்களில் ஆங்காங்கே வைத்திருக்கின்ற குப்பை தொட்டிகளில் போட்டு நிரப்புகின்றனர். அப்படி மொத்தம் சேருகின்ற குப்பைகளை கிராம ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் தள்ளுவண்டிகளில் சேகரித்து செல்கின்றனர்.