சின்னமனூர், மே 22: சின்னமனூர் பகுதியில் சரக்கு வாகனங்களில் தொழிலாளர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் விபத்து அபாயம் நிலவுகிறது. சின்னமனூர் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் எல்லாம் விவசாயமே முக்கிய தொழிலாக உள்ளது. மேலும் சில தொழிற்கூடங்கள், சிறு தொழில்கள் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் சரக்கு வாகனங்களில் பயணிக்கின்றனர். அவைகளில் கூட்டமாக ஏறி நின்று கொண்டு வேகமாக பயணிக்கின்றனர்.