திருச்சி, மே 22: மத்திய பாதுகாப்பு அமைச்சரின் நிதியிலிருந்து முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு 2019-20ம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க திருச்சி கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து திருச்சி கலெக்டர் சிவராசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தகுதிகள் மற்றும் நிபந்தனைகளாக, 1 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள இரு குழந்தைகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம். சம்மந்தப்பட்ட குழந்தையின் பெயர் பார்ட்-2 ஆர்டரில் அல்லது குடும்ப உறுப்பினர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். www.ksb.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பித்திட இயலும். ஜேசிஓ மற்றும் அதற்கும் மேலான தரத்தினர் இதன்கீழ் விண்ணப்பிக்க இயலாது.