முதல் மாடியில் மானாமதுரை

காரைக்குடி: அழகப்பா பொறியியல் கல்லூரி மெயின் பில்டிங் முதல்மாடியில் மானாமதுரை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம்,  இரண்டாவது மாடியில் திருப்பத்தூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆலங்குடி, திருமயம் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம் அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியில்  அமைக்கப்பட்டுள்ளது. மானாமதுரை எம்எல்ஏ தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம் முருகப்பாஹால் கீழ் தளத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணியில் 1000 போலீசார்  

டிஎஸ்பி அருண் கூறுகையில், மாவட்ட எஸ்.பி ஜெயச்சந்திரன் உத்தரவின்படி பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு 1000த்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அழகப்பா பல்கலைக்கழக மெயின் பில்டிங் அருகே மற்றும் ஆர்ச் அருகே பேரிகார்டு அமைக்கப்பட்டுள்ளது.

தவிர பெரியார் சிலை, முதல், இரண்டாம் பீட், புதிய, பழைய பஸ் ஸ்டாண்டு என 20 இடங்களில் ஒரு எஸ்.ஐ தலைமையில் 3 போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவார்கள். பலத்த சோதனைக்கு பிறகே வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். சிறு அசம்பாவிதம் கூட ஏற்படாமல் தவிர்க்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: