காரைக்குடி, மே 22: காரைக்குடி நாயக்கர் தெருவைச் சேர்ந்த அய்யாவு மனைவி தும்மக்கா(75). இவர் ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவர் அருகேயுள்ள மகள் வீட்டிற்கு பகல் நேரங்களில் சென்று விட்டு, இரவு நேரத்தில் மட்டுமே வீட்டுக்கு வருவது வழக்கம். நேற்று மகள் வீட்டுக்கு சென்றுவிட்டு, இரவு தூங்குவதற்காக வீட்டுக்கு வந்த போது, வீட்டின் ஓட்டை பிரித்து மர்ம நபர்கள் உள்ளே சென்று வீட்டில் வைத்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தும்மக்கா காரைக்குடி தெற்கு போலீசில் புகார் அளித்தார். தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடியவர்களை தேடி வருகின்றனர்.