முத்துப்பேட்ைட பகுதி பள்ளிவாசல்களில் ேநான்பு கஞ்சி வினியோகம்

முத்துப்பேட்டை, மே 22: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 15க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்கள் உள்ளது. இவை அனைத்திலும் நோன்பு திறக்க பயன்படுத்தும் நோன்பு கஞ்சி தயாரிக்கப்படுகிறது. கஞ்சி தயாரிக்கும் பணி காலையில் துவங்கி மதியம் நிறைவு பெற்று மாலை 4 மணி தொழுகைக்கு பிறகு மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இதில் சிறப்பு என்னவென்றால் இஸ்லாமியர்களை விட அதிகமாக இந்துக்களே நோன்பு கஞ்சி சாப்பிட ஆசைப்பட்டு ஆர்வத்துடன் வாங்க வரிசையில் நின்று வருகின்றனர். அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பள்ளி வாசல் நிர்வாகமும் தட்டுப்பாடு இல்லாமல் நோன்பு கஞ்சி வழங்கி வருகின்றனர்.

Related Stories: