கமுதி பகுதியில் பயனற்ற குடிநீர் தொட்டி

கமுதி, மே 22: கமுதியில் காளியம்மன் கோவில் காலனி பகுதியில் குடிநீர் தொட்டி நீண்ட நாட்களாக சேதமடைந்து, மோட்டார் இன்ஜின் துருப்பிடித்து பயனற்ற நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இதேபோல் சுந்தரபுரம் ஊரணி அருகே உள்ள தண்ணீர் தொட்டி பயனற்ற நிலையில் உள்ளது. கமுதியில் ஏராளமான பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டி சேதமடைந்துள்ளது. இதனால் அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் இதனை சரி செய்ய வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: