இவ்வாறு பேசினார். ஆர்.எஸ்.மங்கலம் அருகே பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகம் அதிகாரிகள் கவனிப்பார்களா?

ஆர்.எஸ்.மங்கலம், மே 22:  சனவேலி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் பல ஆண்டுகளாக பூட்டிக் கிடப்பதால், பெண்களும்,குழந்தைகளும் அவதியடைந்து வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் பஞ்சாயத்து சனவேலி கிராமம் திருச்சி-ராமேஸ்வரம் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. இந்த ஊர் கிராமமாக இருந்தாலும் இதன் அருகில் உள்ள சிறு கிராமங்களான கண்ணுகுடி, ஒடைக்கால்,கவ்வூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர்களும் ஏதாவது வீட்டு தேவைகளுக்கான சிறு பொருட்கள் வாங்கவேண்டும் என்றாலும் இங்கு தான் வர வேண்டும்.

இந்த ஊர் ஒரு குட்டி டவுன் போன்றது. இப்பகுதி பக்களுக்கு இது மட்டுமின்றி வாரச்சந்தை ஒன்றும் உள்ளது. ஆகையால் எப்போதுமே கொஞ்சம் ஆட்கள் நடமாட்டம் இருக்கவே செய்யும். அப்படியான ஊரில் பொது சுகாதாரத்தை கணக்கில் கொண்டு ஒருங்கிணைந்த மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதனால் உள்ளுர் மற்றும் வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாகவே இந்த சுகாதார வளாகத்தை ஊராட்சி நிர்வாகம் பூட்டி வைத்துள்ளது. இதனால் பொதுமக்கள் இயற்கை உபாதைகளை கழிக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சுகாதார வளாகத்தை பூட்டி வைத்துக் கொண்டு திறந்த வெளியில் மலம் கழிக்க கூடாது என்று அரசும், அரசு அதிகாரிகளும், விளம்பர படுத்துவது எந்த வகையில் நியாயம். இதனை உடனே திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பயணி ராணி கூறுகையில், ‘‘எங்களை போன்றவர்கள் வெளியூர்களில் இருந்து வந்து பஸ் ஏறிச் செல்லவும், சந்தைக்கு சாமான்கள் வாங்கவும் வருகிறோம்.

அவசரத்திற்கு பாத்ரூம் செல்ல வேண்டும் என்றால் பாத்ரூம் பூட்டிக் கிடக்கின்றது. உள்ளூரில் அவரவர் வீட்டில் பாத்ரூம் கட்டி வைத்துள்ளனர். எங்களைப் போன்ற வெளியூர் பெண்கள் மற்றும் உள்ளூரில் பாத்ரூம் இல்லாதவர்களும் என்ன செய்வது திறந்த வெளியில் போக முடியுமா? கண்மாய், குளம், குட்டையிலும் தண்ணீர் இல்லை.

இப்படி இருக்கும் நிலையில் இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனையாக உள்ளது. எத்தனையோ தேவையில்லாத செலவுகளை செய்யும் அரசு இதனை சரி செய்து கொடுத்தால் என்ன? எது எப்படியோ பொதுமக்களின் நலன் கருதி சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உடனே சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்’’என்றார்.

Related Stories: