சிவகங்கை, மே 22: காளையார்கோவில் அருகே அழகாபுரியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழக கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது. ராஜீவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக கவர்னர் உத்தரவிடக்கோரி அழகாபுரி போஸ்ட் ஆபீசில் தபால் போராட்டம் நடத்தப்பட்டது.