ராமநாதபுரம், மே 22: இளம் ஆட்டுக்குட்டிகளை அதிகளவில் கூடாரங்களில் அடைத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறக்கும் வாய்ப்பு உள்ளதால், அவ்வாறு செய்யக் கூடாது என கால்நடை பராமரிப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது. மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தெரிவிக்கையில்: இளம் ஆட்டுக்குட்டிகளை குறிப்பாக செம்மறி ஆட்டுக்குட்டிகளை பனை ஓலையால் வேய்ந்த கிடாப்பில் அடைப்பதை ஆடு வளர்ப்போர் செய்கின்றனர். இவ்வாறு செய்யும்போது சிலர் அதிகமான குட்டிகளை உள்ளே அடைத்து விடுகின்றனர். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறப்பு ஏற்படுகிறது.