கிரிக்கெட் போட்டியில் மோதல் இரண்டு பேருக்கு பலத்த காயம்

சாயல்குடி, மே 22: முதுகுளத்தூர் அருகே பகைநெறி கிராமத்தில் கோடைகால கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் இப்பகுதியை சேர்ந்த பல்வேறு அணியினர் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். நேற்று குமாரக்குறிச்சி அணியினரும், கீழக்காஞ்சிரங்குளம் அணியினரும் மோதிக்கொண்டனர். இரு அணியினரும் இருபிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் தொடக்கம் மோதல் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் நடுவராக செயல்பட்டவர் ஒரு சமூகத்தை சேர்ந்த அணியினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஒருபிரிவினர் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இரு அணியினரும் ஒருவருக்கொருவர் பேட் மட்டைகளால் தாக்கிக் கொண்டனர். இதில் தர்மலிங்கம் மகன் சிவாஆனந்த்(25) பன்னீர்செல்வம் மகன் திருநந்தபிரபு ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அபிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: