வாக்கு எண்ணும் மையத்தில் 550 மீட்டர் பேரிகாடு

பெரம்பலூர், மே 22: பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள தனலெட்சுமி சீனிவாசன் கல்லூரிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையொட்டி அங்கு நாளை வாக்கு எண்ணி க்கை நடைபெறுவதால் பெரம்பலூர் துறையூர் சாலையில் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரிக்கு முன்பாக 200மீட்டர் நீளத்திற்கும், கேட்டிலிருந்து கவுன்ட்டிங் சென்டருக்கு 200மீட்டர் நீளத்திற்கும் சவுக்குக் கழிகளால் பேரி காடு அமைக்கப் பட்டுள்ளது. கல்லூரிக்கு அட்மிசனுக்காக வருவோர் வாக்கு எண் ணும்மையத்திற்கு வந்து விடாதிருக்க மேலும் 150மீட்டர் நீளத்திற்கு பேரிகாடு அமைக்கப் பட்டுள்ளது.

Related Stories: