அரியலூர், மே 22: அரியலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வசந்தன், அழகுவேல் ஆகியோர் டீ தூள், நெய், பருப்பு, சோம்பு, எண்ணெய், ஜவ்வரிசி உள்ளிட்ட உணவு பொருள்களில் எவ்வாறு கலப்படத்தை கண்டறிவது குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.மேலும் பொதுமக்களிடம் கோடைகாலத்தில் மேற்கொள்ள வேண்டிய உணவு பாதுகாப்பு முறைகள் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.