காரைக்காலில் அடையாளம் தெரியாத இருவர் சாவு

காரைக்கால், மே 22: காரைக்காலில் அடையாளம் தெரியாத இருவர் வெவ்வேறு இடங்களில் இறந்துள்ளதால், அவர்கள் குறித்த  தகவலுக்காக போலீசார் காத்திருக்கின்றனர். காரைக்கால் நகர காவல்நிலைய போலீசார் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: காரைக்கால் மாரியம்மன் கோயில் வீதி அருகே, அடையாளம் தெரியாத ஒரு பெண் இறந்து கிடப்பதாக வந்த தகவலின் பேரில், உடலை கைப்பற்றி, மாவட்ட அரசு பொதுமருத்துவமனையில் வைத்துள்ளோம். இறந்தவருக்கு 55 லிருந்து 60 வயது இருக்கலாம். மஞ்சள் நிற ரவிக்கை, ஊதா-மஞ்சள்நிற புடவை அணிந்துள்ளார். வலது கை மணிகட்டில் ஒரு மறுவும், இடது பக்க கன்னத்தில் ஒரு மச்சமும் உள்ளது. இவரைப்பற்றி யாருக்கேனும் தகவல் தெரிந்தால் நகர காவல் நிலையத்தை அனுக வேண்டுகிறோம். அதேபோல், காரைக்கால் காமராஜர் சாலை சுகப்பிரியா தனியார் மருத்துவமனை அருகே, ஒரு ஆண் இறந்து கிடப்பதாக வந்த தகவலின் பேரில், உடலை கைபற்றி, மாவட்ட அரசு பொதுமருத்துவமனையில் வைத்துள்ளோம்.

இறந்தவர் 60 லிருந்து 65 வயது இருக்கலாம். வெள்ளை அரைகை சட்டையும், காவி நிற வேஷ்டியும் அணிந்துள்ளார். வலது பக்க கன்னத்தில் ஒரு மச்சமும், மார்பின் நடுவே ஒரு மச்சமும் உள்ளது. நீண்ட தாடியுடன் உள்ளார். இது குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் நகர காவல்நிலையத்தை அனுகவேண்டுகிறோம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: