வேதாரண்யத்தில் வெயிலுக்கு சுருண்டு விழுந்து முதியவர் சாவு

வேதாரண்யம், மே 22:  வேதாரண்யத்தில் கடும் வெயிலுக்கு சுருண்டு விழுந்து முதியவர் இறந்தார். வேதாரண்யம்  தேத்தாகுடி பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (80). இவருக்கு இரண்டு  மனைவிகள். இரண்டாவது மனைவியுடன் ராஜகோபால் வேதாரண்யம் கடைவீதிக்கு  வந்தார். அப்போது வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது.  கம்பை ஊன்றி  கொண்டு மனைவியுடன் வந்த ராஜகோபால், வேதாரண்யம் வடக்கு வீதி நாகை சாலை  சந்திப்பில் ஒருகடை அருகே நிழலுக்காக அமர்ந்தார். அப்போது  திடீரென மயங்கி விழுந்து இறந்தார். அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்சை உடனை அழைத்தனர். மருத்துவ அலுவலர்கள் ராஜகோபாலை பரிசோதித்து இறந்து விட்டதாக தொிவித்தனர். இதைடுத்து மறைஞாயநல்லூரிலிருந்து அவரது  உறவினர்கள் வந்து ராஜகோபாலின் உடலை ஊருக்கு அடக்கம் செய்ய கொண்டு சென்றனர்.

Related Stories: