காரைக்காலில் வாகன சோதனையில் பைக் திருடன் கைது 3 டூவீலர்கள் பறிமுதல்

காரைக்கால், மே.22: காரைக்கால் நகராட்சி சந்தை திடல் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில், செங்கல்பட்டை சேர்ந்த பைக் திருடனை போலீசார் கைது செய்து, அவனிடமிருந்து 3 பைக்கை பறிமுதல் செய்தனர்.

காரைக்கால் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில், போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக பைக் ஓட்டிவந்த  ஒருவரை நிறுத்தி, சோதனை செய்தபோது, பைக்குக்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. தொடர் விசாரணையில், பைக்கை ஓட்டிவந்த நபர் செங்கல்பட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் திணேஷ்(28) என்பதும், காரைக்கால் வாரச்சந்தை மற்றும் நகர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக தங்கி, பைக்குகளை திருடி வந்ததும் தெரியவந்தது. பின்னர், திணேஷை கைது செய்த போலீசார், காரைக்காலின் பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருந்த 2 பைக் என மொத்தம் 3 பைக்குகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காரைக்கால் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: