விவசாயிகள் கவலை திருவிழா தகராறு வீட்டில் தூங்கியவர் சாவு

கரூர், மே 22: கரூர் எஸ்.வெள்ளாளப்பட்டியில் இந்திராநகர் பகுதியைசேர்ந்தவர் ராஜா(49). அங்கு நடைபெற்ற திருவிழாவில் இவருக்கும் தர்மராஜ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டில் வந்து தூங்கினார். தூக்கத்திலேயே இறந்துவிட்டார். இதுகுறித்து புகாரின்பேரில் பசுபதிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடையாளம் தெரியாத ஆண்சடலம்: கரூர் தாந்தோணிமலை பேருந்து நிறுத்தம் அருகே 50வயது மதிக்கத்த  ஆண் ஒருவர் இறந்துகிடந்தார். இதுகுறித்து கிராமநிர்வாக அலுவலர் சரவணன் தாந்தோணிமலைபோலீசில் புகார் செய்தார். போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: