க.பரமத்தி, மே 22: க.பரமத்தியில் செவ்வாய்தோறும் கூடும் வாரச்சந்தை அன்று ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று க.பரமத்தி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். க.பரமத்தி ஒன்றியம் பரமத்தி கடைவீதியில் காவல்நிலையம் எதிரே செவ்வாய்கிழமைதோறும் வாரச்சந்தை கூடுகிறது. சந்தைக்குள் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சிறு, குறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கடைகள் போட்டு மொத்தமாகவும், சில்லரையாகவும் வியாபாரம் செய்து வருகின்றனர். இதில் பலர் வாரச்சந்தை நுழைவாயிலில் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் சிறு, சிறு கடைகளை போட்டு வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பஸ்கள், லோடு ஏற்றி செல்லும் லாரிகள், நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சாலையோர கடைகள் இடையூறாக உள்ளது.