சிதிலமடைந்த குடிநீர் தொட்டி

கரூர், மே 22:  சின்டெக்ஸ் தொட்டி மேடைஇடிந்து பயன்படுத்த முடியாதநிலையில் உள்ளது. கரூர் அருகே உள்ள பவித்திர மேடு ஆண்டவர் நகரில் மெயின்ரோட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சின்டெக்ஸ் தொட்டி வைத்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது.தொட்டியின்மேடை இடிந்து சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும் குழாய்இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். விரைவில் பழுதை சரிசெய்து சின்டெக்ஸ்தொட்டியில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: