திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை மூடியால் வாகன ஓட்டிகள் அவதி

கரூர், மே 22: பாதாள சாக்கடை மூடி திறந்துகிடப்பதால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடை கின்றனர். கரூர் ரத்தினம் சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்தசாலையாகும். ரயில்நிலைய பகுதியில் இருப்பதால் எந்நேரமும் இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கிறது. பாதாளசாக்கடை பணிக்காக மேன்ஹோலை அப்புறப்படுத்தினர். பணி முடிந்ததும்அப்படியே விட்டுவிட்டு போய்விட்டனர். இதனால் சிமென்ட் துண்டுகள் சிதறி கிடக்கின்றன. மேலும் மேன்ஹோல் சிமென்ட் மூடியும் குழி அருகே போடப்பட்டிருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்அடைகின்றனர்.முக்கியசாலைகளில் இதுபோன்று போக்குவரத்து இடையூறு ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: