சென்னை: இலங்கையில் இருந்து நேற்று அதிகாலை 2.45 மணிக்கு இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது யாசர் அராபத் (25), ஜகீர் உசேன் (34) ஆகியோர் இலங்கைக்கு சுற்றுலா பயணியாக சென்று சென்னைக்கு திரும்பி வந்தனர். சந்தேகத்தின் பேரில் சுங்க அதிகாரிகள் அவர்களை சோதனை செய்தபோது, உள்ளாடைக்குள் 340 கிராம் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. இதன் மொத்த மதிப்பு 11.1 லட்சம். அவற்றை பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணிக்கு அபுதாபியில் இருந்து எட்டியார்டு ஏர்லைன்ஸ் விமானம் சென்னை விமான நிலையம் வந்தது. அதில், ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த பாசா மொகிதீன் (35) என்பவர் சுற்றுலா பயணியாக அபுதாபி சென்று, சென்னைக்கு திரும்பி வந்தார்.