பொன்னேரி அருகே துணிகரம் வீட்டின் கதவை உடைத்து 25 பவுன் கொள்ளை

பொன்னேரி, மே 22: பொன்னேரி அருகே முடி திருத்துபவர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 25 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பொன்னேரி அடுத்த சின்னகாவனம் வள்ளலார் கோயில் பின்புறம் வசித்து வருபவர் நடராஜன் (60). முடி திருத்தும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மலர்விழி (55). இவர்களது மகள் காஞ்சனா (35). இவர்கள் ஒன்றாக வசித்து வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல, இவர்கள் சாப்பிட்டு விட்டு படுக்கைக்கு சென்றனர். காலையில் எழுந்து பார்த்தபோது, பின்பக்கக் கதவு திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த துணிமணிகள் சிதறிக்கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பொருட்களை சரிபார்த்தபோது 25 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது. இதுகுறித்து பொன்னேரி போலீசுக்கு நடராஜன் தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் வழக்கு பதிந்து நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து  25 பவுன் நகை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: