திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக வாக்கு எண்ணும் முகவர்கள் ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர், மே 22: திருவள்ளூர் தெற்கு மாவட்ட  வாக்கு எண்ணும் முகவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது. திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் அறிக்கை: திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட  வாக்கு எண்ணும் முகவர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று  மாலை 6 மணியளவில் வேப்பம்பட்டில் உள்ள கோவிந்தராஜ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி.,  ஆலோசனைகளை வழங்க உள்ளார். வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணுவது தொடர்பான பொதுவான நடைமுறைகள் குறித்தும், தலைமை கழகத்திடம் இருந்து பெறப்பட்டுள்ள ஆலோசனைகளையும் வாக்கு எண்ணும் முகவர்களுக்கு விரிவாக வழங்கப்பட உள்ளது.

 இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் பூவை ஜேம்ஸ், ஏ.ஜி.சிதம்பரம்,  திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஆ.கிருஷ்ணசாமி, மாநில, மாவட்ட நிர்வாகிகள் இ.பரந்தாமன், சி.ஜெரால்டு, ஆர்.டி.இ.ஆதிசேஷன்,  கே.திராவிடபக்தன், நடுகுத்தகை ஜே.ரமேஷ், கா.பார்த்தசாரதி, காயத்ரிதரன், மு.ராஜேந்திரன், ம.ராஜி, ஜெ.ஜெய்மதன், ஜி.ஆர்.திருமலை, கே.யு.சிவசங்கரி ஆகியோர் கலந்துக் கொள்கின்றனர். எனவே, இந்த கூட்டத்தில் திருவள்ளூர்  நாடாளுமன்றத் தொகுதி மற்றும் பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள்,  சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் முகவர்கள் தவறாமல் பங்கேற்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: