அஞ்சுகிராமம் அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு

அஞ்சுகிராமம், மே 22:  அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரம்  வளன் நகரை சேர்ந்தவர் ஜெயசேகர். இவரது மனைவி சகாய புஷ்பரதி (45). இவர் நேற்று காலை மீன் வாங்க சென்றார். செங்குளம் அருகே சென்றபோது, பைக்கில் வந்த  சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் அவரது கழுத்தில் கிடந்த சுமார் 6 பவுன் செயினை   பறித்து விட்டு வேகமாக சென்று விட்டார். இது குறித்து சகாய புஷ்பரதி  அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு  செய்து கொள்ளையனை  தேடி வருகிறார்கள். டெம்போ மோதி வாலிபர் பலிநாகர்கோவில், மே 22:  நாகர்கோவில் அருகே உள்ள ஆனைபொத்தை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் ஆதிசிவன்(26). இவர் நேற்று முன்தினம் புத்தேரி ஆனைபொத்தை சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த டெம்போ ஆதிசிவன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஆதிசிவனை ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் அவர் இறந்தார். இது குறித்து மனோகரன் நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் டெம்போ டிரைவர் ஆனைபொத்தை அன்புநகரை சேர்ந்த சந்தோஷ் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: