வைகை அணை பகுதியில் வாலிபர் உடல் மீட்பு

ஆண்டிபட்டி, மே 21: ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை பகுதியில் மர்மமான முறையில் மாற்றுத்திறனாளி உடல் சடலமாக கரை ஒதுங்கியது. அவரை யாரும் கொலை செய்தனரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆண்டிபட்டி அருகே வைகை அணை பகுதியில் நேற்று காலை 10.30 மணியளவில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்  கரை ஒதுங்கி இருப்பதாக காவல்நிலையத்திற்கு தகவல் வந்தது. தகவலறிந்த ஆண்டிபட்டி டிஎஸ்பி சீனிவாசன் சம்பவ இடத்தை பார்வையிட்டார். இதனையடுத்து காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வைகை அணை காவல் துறையினர் வழக்குப் பதிந்து கொலையா? தற்கொலையா? என்று விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், ``இறந்தவருக்கு  35 முதல் 45 வயதிற்குள் இருக்கும்.  இடதுகையில் மொழிக்கு கீழ் கை இல்லை’’ என்று தெரிவித்தனர்.

Related Stories: