கள்ளக்குறிச்சி, மே 21: சங்கராபுரம் அடுத்த வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டராமன்(55), விவசாயி. இவர் தனது பைக்கில் நேற்று சூளாங்குறிச்சி கிராமத்தில் இருந்து வளையாம்பட்டு கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தார். பழையசிறுவங்கூர் காந்திநகர் வளைவுபாதையில் எதிரே நூரோலை கிராமத்தை சேர்ந்த அரசன் மகன் அன்பு(27). இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள பைனான்ஸ் கம்பெனியில் கலெக்ஷன் செய்யும் வேலை செய்து வருகிறார். இவர் தனது பைக்கில் கள்ளக்குறிச்சி பைனான்ஸ் கம்பெனிக்கு செல்லும் போது எதிர்பாராவிதமாக கோதண்டராமன் பைக் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கோதண்டராமன் தூக்கி வீசப்பட்டதில் தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.