திருவண்ணாமலை, மே 21: திருவண்ணாமலையில் பவுர்ணமி நாளன்று பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார். திருவண்ணாமலை முத்துவிநாயகர் கோயில் தெருவில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் பி.வடிவேல்(52), இவர் வேட்டவலம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி பவுர்ணமியை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக திருவண்ணாமலை குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, சிவன்படத்ெதரு அய்யங்குளம் அருகே பணியிலிருந்த போது, திடீரென வடிவேலுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.