ராகுல்காந்தி பிரதமராக வழிபாடு சங்கரன்கோயிலில் விவசாயிகள் அங்கபிரதட்சணம்

சங்கரன்கோவில், மே 21:  சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமராக வேண்டி விவசாய  அமைப்பினர் அங்கபிரதட்சணம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து கோயில்  முன்புள்ள விநாயகர் கோயிலில் தேங்காய் உடைத்து  வழிபட்டனர். இதுகுறித்து மருதங்கிணற்றை சேர்ந்த விவசாயி முத்துபாண்டியன் கூறியதாவது: வருகிற 23ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் 300  இடங்களுக்கு மேல்  வெற்றிபெற்று பிரதமராக ராகுல்காந்தி  வர வேண்டும் என்பதற்காக இந்த வழிபாடு நடைபெற்றது, என்றார். இதில் மருதங்கிணற்றை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.

Related Stories: