புளியங்குடி, மே 21: கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி போலீஸ் சரகத்தில் உள்ள சிங்கிலிபட்டி புதுக்காலனியை சேர்ந்த ஆறுமுகம் மகன் வெங்கடேஷ் (18). இவர் அருகே உள்ள சங்கனாப்பேரி கோயில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். அப்போது அதே ஊர் இந்திரா காலனி வடக்கு தெரு முனியாண்டி மகன் கணேசன்(38) என்பவரது தங்கை மகளை கேலி கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதில் தகராறு ஏற்பட்டுள்ளது. கணேசன் உள்ளிட்ட 6 பேர், வெங்கடேஷ் வீட்டிற்கு சென்று கம்பால் தாக்கினர். காயமடைந்த அவர் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து சொக்கம்பட்டி எஸ்ஐ முத்துராஜா விசாரணை நடத்தி கணேசன் மற்றும் முருகன்(48), கொம்பன்(49), குமார்(48), குமார்(53) காளிராஜ் மகன் நாகராஜ்(20) ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிந்து தேடி வருகிறார்.