கரிவலம்வந்தநல்லூரில் இன்று மின்தடை

சங்கரன்கோவில், மே 21:  கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் இன்று (21ம் தேதி) மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. கரிவலம்வந்தநல்லூர் துணை மின்நிலையத்தில், இன்று (21ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள்  நடைபெறுகிறது. இதையொட்டி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை  கரிவலம்வந்தநல்லூர், பனையூர், குவளைக்கண்ணி, கோமதிமுத்துபுரம்,  இடையான்குளம், எட்டிச்சேரி, சென்னிகுளம், லெட்சுமியாபுரம், காரிச்சாத்தான்,  செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் ஆகிய கிராமங்களில் மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை சங்கரன்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் ரமேஷ்  தெரிவித்து உள்ளார்.

Related Stories: