சங்கரன்கோவில், மே 21: கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் இன்று (21ம் தேதி) மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. கரிவலம்வந்தநல்லூர் துணை மின்நிலையத்தில், இன்று (21ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கரிவலம்வந்தநல்லூர், பனையூர், குவளைக்கண்ணி, கோமதிமுத்துபுரம், இடையான்குளம், எட்டிச்சேரி, சென்னிகுளம், லெட்சுமியாபுரம், காரிச்சாத்தான், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் ஆகிய கிராமங்களில் மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை சங்கரன்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.