உடன்குடி,மே 21: குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கோயில் அருகே சாலையின் குறுக்கே விழுந்து கிடக்கும் மின்கம்பத்தை அகற்றி புதிதாக நடவேண்டுமென பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு செவ்வாய், வெள்ளிக்கிழமை மற்றுமின்றி வார விடுமுறை நாட்கள், வார நாட்கள் என தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் மட்டுமின்றி கன்னியாகுமரி, மணப்பாடு, ஆலந்தலை, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளும் குலசேகரப்பட்டினம் கடற்கரைக்கு வந்து செல்வர். மேலும் குலசேகரப்பட்டினம் கடலில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் வருவர்.