மானூர், மே 19: மேலப்பிள்ளையார்குளத்தைச் சேர்ந்தவர் நயினார் (40) தொழிலாளியான இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த மாரியப்பன் (42) என்ற விவசாயிக்கும் ஏற்கனவே விரோதம் இருந்து வந்தது. கடந்த 15ம் தேதி நயினார் தனது வீட்டின் முன் நின்றுகொண்டிருந்தபோது அங்கு வந்த மாரியப்பன், நயினாரை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் பலத்த காயமடைந்த நயினார் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்குப் பதிந்த மானூர் எஸ்,ஐ சேட்டை நாதன் விசாரித்து வருகிறார்.