திருமங்கலத்தில் இன்று மறுவாக்குப்பதிவு

வெள்ளகோவில்,மே19: திருப்பூர் மாவட்டம் வெளகோவில் அருகே உள்ள திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவில் ஏற்பட்ட குளறுபடியால் மறு வாக்குப்பதிவு இன்று  நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஈரோடு மக்களவை தொகுதிக்குட்பட்ட காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள வெள்ளகோவில் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய வாக்குச்சாவடி எண் 248 ல் மக்களவை தேர்தல் நடைபெற்றபோது மாதிரி வாக்குப்பதிவை அளிக்காமல் வாக்கு பதிவு நடைபெற்று முடிந்தது.இதனால் இந்த வாக்குச்சாவடியில் மறு வாக்கு பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று(19ம்தேதி)  காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்க உள்ளது.  மொத்த வாக்காளர்கள் 920 உள்ளனர், தற்போது காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். மேலும் நடைபெறும் வாக்குப்பதிவின் போது 250 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்காக நான்கு இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது .  மறு வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி தேர்தல் நடத்தும் அலுவலரும் ஈரோடு கலெக்டருமான கதிரவன் நேற்று முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Related Stories: