திருப்பூர்,மே 18: திருப்பூர் கோல்டன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ்(31).பனியன் தொழிலாளி. இவரது மனைவி பானுப்பிரியா. தம்பதிக்கிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில், சம்பவத்தன்று செல்வராஜ் தனது மனைவியை தாக்கியதாக தெரிகிறது. இதனால் பானுப்பிரியா போயம்பாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதையறிந்த பானுப்பிரியாவின் தம்பி அருண்குமார்(22), தனது நண்பர்களான பாண்டி(22), அஜித்குமார்(22), வினோத்(22) ஆகியோருடன் செல்வராஜின் வீட்டுக்கு சென்று அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 4 பேரும் சேர்ந்து மது பாட்டிலால் செல்வராஜை குத்தியதாக தெரிகிறது. பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். செல்வராஜின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார், பாண்டி, அஜித்குமார், வினோத் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.