இளம்பெண் தற்கொலை

திருப்பூர், மே 19: திருப்பூர் பிச்சம்பாளையத்தை அடுத்த ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி சத்யா (22). நீண்ட நாட்களாக சத்யா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தும் குணமாகவில்லை என தெரிகிறது. சத்யா சம்பவத்தன்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது பாதி வழியிலேயே பரிதாபமாக அவர் உயிரிழந்தார். திருமுருகன்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: