குப்பைக் கிடங்கில் தீ

வெள்ளகோவில்,மே19: வெள்ளகோவில் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இவற்றில் சேகரிக்கப்படும் குப்பைகள் சொரியங்கிணத்துப்பாளையத்திலுள்ள குப்பைக் கிடங்குக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.அங்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரிக்கப்பட்டு தனித்தனியாக வைக்கப்படுகின்றன. இவ்வாறு மக்காத குப்பைகள் இருக்கும் பகுதியில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இதன் காரணமாக கடும் புகை மூட்டம் ஏற்பட்டு அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து வெள்ளக்கோவில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணன் கொடுத்த தகவலின் பேரில், வெள்ளக்கோவில் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.

Related Stories: