திருப்பூர், மே, 17; இந்துகளை தீவிரவாதி என்று பேசியதாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணியினர் திருப்பூர் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து இந்து முன்னணி செயற்குழு உறுப்பினர் ராஜா அளித்துள்ள புகார் மனு: கடந்த 13 ம் தேதியன்று அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் வாக்கு சேகரிக்க வந்த மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து தான் என்று ஒட்டுமொத்த இந்துகளின் மனதையும் புண்படுத்தும் விதமாக பேசியுள்ளார். எனவே மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.