குடியாத்தம் கெங்கை அம்மன் திருவிழாவின் போது 100க்கும் மேற்பட்ட செல்போன்கள் திருட்டு காவல் நிலையத்தில் குவியும் புகார்கள்

குடியாத்தம் மே 17: குடியாத்தத்தில் சிரசு திருவிழாவின் போது ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட செல்போன்கள் திருட்டுபோனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி, பல லட்சம் பக்தர்கள் அம்மனை தரிசிக்க திரண்டனர். இந்தநிலையில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் 100க்கும் மேற்பட்ட நபர்களிடம் செல்போன்களளை திருடி உள்ளனர். இதுகுறித்து, ஏராளமானோர் நேற்று முன்தினம் தற்காலிக போலீஸ் உதவி மையத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, நேற்று காலை குடியாத்தம் தாலுகா மற்றும் டவுன் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து சிஎஸ்ஆர் பெற்று சென்றனர். மேலும், சிலர் செல்போன்களுக்கு இன்சூரன்ஸ் செய்திருந்ததால் காவல் நிலையத்தில் சான்றிதழ் பெற மனு அளித்தனர்.

Related Stories: