அரக்கோணம் ஏடிஎம் மிஷினில் கூடுதல் பணம் வந்ததா? பொதுமக்கள் குவிந்ததால் திடீர் பரபரப்பு

அரக்கோணம், மே 17: அரக்கோணம் பழனிப்பேட்டை பகுதியில் ஒரு வங்கியின் ஏடிஎம் மெஷின் உள்ளது. இந்த ஏடிஎம் மெஷினில் ஒரு சிலர் நேற்று காலை பணம் எடுக்க சென்றனர். அப்போது, அவர்கள் பணம் எடுக்கும் போது குறித்த தொகையை விட கூடுதலாக பணம் வந்ததாக கூறப்படுகிறது. இத்தகவல், அப்பகுதியில் வேகமாக பரவியது. இதையடுத்து, ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக பொதுமக்கள் பலர் ஒன்று திரண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் இதுகுறித்து உடனடியாக வங்கி அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். பின்னர், தற்காலிகமாக ஏடிஎம் மிஷின் உள்ள பகுதியின் கதவு மூடப்பட்டது. இந்நிலையில், ஏடிஎம் மிஷினில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்த பின்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஏடிஎம்மில் இருந்து யாருக்காவது கூடுதலாக பணம் சென்று உள்ளதா? அப்படி, பணம் எடுத்து சென்றது யார், யார் என்பது குறித்து வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: